நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கோவையை சேர்ந்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை பூர்ணா, தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரளாவில் கொச்சியில் வசித்து வரும் இவரிடம் நகைக்கடை அதிபர் என்று கூறி பண மோசடி செய்ய முயன்றதாக பூர்ணாவின் தாயார் போலீசில் சமீபத்தில் புகார் செய்திருந்தார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக கேரளாவை சேர்ந்த சரத், அஷ்ரப், ரபீக் மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் பூர்ணாவிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் பூர்ணா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் இதுவரை 10பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல மாடல் அழகிகளிடம், பெண்களிடம் சினிமா வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறி பணத்தையும், நகையையும் பறித்தது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி பலரை பாலக்காட்டில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் கோவையை சேர்ந்த நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் ஆகிய இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…