கர்ணன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கர்ணன் படம் குறித்து சமீபத்தில் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது ” படம் வெளியாகிறது இன்னும் சில நாட்களில் நான் என்ன சொல்ல..? ஆனால் படத்தை பார்த்த பிறகு அதனுடைய தாக்கம் கண்டிப்பாக இரண்டு நாட்கள் இருக்கும். கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கும். படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை செதுக்கி இருக்காரு” என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான அடுத்த பாடலும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…