ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோ-பிளாக்கிங் தளமான டுவிட்டர் நிறுவனம்,கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஃப்ளீட்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸைப் போன்று 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.மக்களை ட்வீட் செய்ய தூண்டும் முயற்சிக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்,பயனர்களின் குறைந்த பயன்பாடு காரணமாக ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.இதனால்,ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் முற்றிலுமாக நீக்கப்படும்.முன்னதாக,எட்டு மாதங்களுக்குப் பிறகு,புதிய நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று டுவிட்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம்,தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியதாவது:”ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாங்கள் ஃப்ளீட்ஸை நீக்குகிறோம் .அதற்கு பதிலாக,வேறு சில புதிய விஷயங்களைச் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக டுவிட்டரின் தயாரிப்பு துணைத் தலைவர் இலியா பிரவுன் கூறுகையில்:”டுவிட்டர் உரையாடலில் மக்களுக்கு வசதியாக இருக்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற வடிவமைப்பைச் செய்வதற்கான நிறுவனத்தின் முயற்சியாக ஃப்ளீட்ஸ் இருந்தது.ஆனால், இதனை நாங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து, எதிர்பார்த்தது போல புதிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை”,என்று தெரிவித்தார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…