துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. அங்கும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் சரிந்து விழுந்துள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமானது மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போது இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துருக்கி பேரழிவு மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, சுகாதார மைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார். இஸ்மீயர் நகரத்தின் மேயர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாகாணம் முழுவதும் 400 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்மியர் நகராட்சி மையத்தில், பல நிறுவப்பட்டுள்ளதாகவும், இந்த கூடாரத்தில் உணவு மற்றும் பிற பொருட்கள் தேவைப்படுவோருக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…