கால அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்று துருக்கி நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சாய்லு ராஜினாமா செய்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் போராடி கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இதுவரை 56,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டுமே 4,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று மட்டுமே 97 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக துருக்கியில் 1198 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதன் காரணமாக அந்நாட்டு அரசு, கால அவகாசம் இன்றி ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கும் சூழல் நிலவியது. இதனால், அப்பகுதியில் சமூக தொற்று நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
கால அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சாய்லு ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை துருக்கி அதிபர் எர்டோகன் ஏற்க மறுத்து, மறு பரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…