#Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் 14 பேர் பலி , 120 பேர் காயம்

Default Image

துருக்கியில் உள்ள “ஏகன்” தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிய அளவு சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால்,பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது .இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 14 உயிரிழந்துள்ளனர் என்றும்  120 பேர் காயமுற்றுள்ளதாக  முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .

இதற்கு முன்னர் 1999 இல், துருக்கியின் வடமேற்கில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்தான்புல்லில் 1,000 பேர் உட்பட 17,000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

தென்கிழக்கு மாகாணமான வேனில் 2011 ல் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்