குரங்கணி காட்டுத்தீயை வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம்!

Default Image

9 பேர்  தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருக்கின்றனர்.மேலும்  15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில்  சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிளந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து , மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு, வழிகாட்டிகள் நியமனம் போன்ற விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை முறையாக கடைபிடிக்கவேண்டும் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்