டிரம்பின் 14 வயது மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த டிஸ்சார்ச் செய்யப்பட்டு ,வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.ஆனால் மெலனியா டிரம்ப் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டிரம்பின் 14 வயது மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது பரோன் டிரம்பிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…