டிரம்பின் 14 வயது மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த டிஸ்சார்ச் செய்யப்பட்டு ,வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.ஆனால் மெலனியா டிரம்ப் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டிரம்பின் 14 வயது மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது பரோன் டிரம்பிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…