டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம்.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,47,318 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 80,040 ஆகவும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே இந்த கொரோனா வைரஸை சீனாதான் பரப்பி விட்டதாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு வருகிறார். பின்னர் உலக சுகாதார அமைப்பை, சீனாவுக்கு ஆதரவாக இருக்கு என்று கூறி வழங்கப்படும் நிதியையும் நிறுத்தி வைப்பதாக மிரட்டல் விட்ட நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அங்குள்ள சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் தற்போது நடைபெறும் ஆட்சி மீது முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதில், உயிரிழப்பு குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா பெரும் இழப்பை சந்தித்துள்ளது. சுயநலவாதியாக நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் தற்போது அமெரிக்கா மிக பெரிய பாதிப்பை கண்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதே மறந்து ஒரு அரசாங்கம் செயல்படுகிறது. இதுபோன்ற நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றதாக இருக்கும் என நினைக்கிறன். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட போகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…