சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published by
Venu

2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் அதிபர் சாத்- ஐ.எஸ் பயங்கரவாதிகள் – கிளர்ச்சியாளர்கள்  இடையே மோதல் நடந்துவருகிறது.தற்போது இந்த மோதல்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா அதிபர் சாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.அதேபோல் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு  ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவில் பல்வேறு பகுதிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பகுதிகள் அரசுப் படைகளால் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் மட்டும் மோதல் நடைபெற்று வருகிறது.அங்கு நடைபெறும் மோதலால் உள்நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும்  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே தான் இந்த உள்நாட்டு போரில் தான் ரஷ்யா மற்றும் அதிபர் சாத்தின் அரசுப் படைகள் அங்குள்ள மக்களை கொன்று குவித்தாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன்.ஆனால் அப்போது பாதுகாப்பு துறை அமைச்சக செயலராக இருந்த ஜேம்ஸ் மேட்டிஸ் அந்த முடிவை மறுத்துவிட்டார். அதனால் அவர் முடிவுக்கே விட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

42 minutes ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

42 minutes ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

2 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

3 hours ago

கேட்ச் விட்டாச்சு..பீல்ட்டிங் சரியில்லை! கேஎல் ராகுலால் அப்செட்டில் ரசிகர்கள்!

துபாய் :  சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…

3 hours ago

2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!

லாஸ் ஏஞ்செல்ஸ் : ஆண்டுதோறும் சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அமெரிக்கா…

3 hours ago