சீனாவில் உள்ள வுகாண் நகரில் இருக்கும் ஆய்வு கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதனை வெளியிடுவேன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
சீனாவில் உள்ள வுகாண் நகரில் இருக்கும் சந்தையில் தான் கொரோனா கண்டறியப்பட்டது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், சீனாதான் திட்டமிட்டு கொரோனவை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார்.
இது தொடர்பாக நேற்று அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர், கொரோனா வைரஸ் சீனாவால் தான் உருவாக்கப்பட்டது என கூறுவதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், ‘ சீனாவில் உள்ள வுகாண் நகரில் இருக்கும் ஆய்வு கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதனை வெளியிடுவேன்.’ என தெரிவித்தார்.
மேலும், சீனாவின் மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…