அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன .
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபைசர் தடுப்பூசியை நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் அரசாங்கம் ஏற்கனவே அனுப்பத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே அமெரிக்காவில் பயன்பாட்டிற்காக வரவுள்ள கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன .திங்களன்று 145 விநியோக மையங்களுக்கு தடுப்பூசி வந்து சேரும் என்றும், பின்பு கூடுதலாக 425 மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 66 புதன்கிழமை மையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் மத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.தடுப்பூசி கிட்டத்தட்ட 3,00,000 அமெரிக்கர்களுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த…
சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…