டிஜிட்டல் தளம் போதை பொருள் போன்றதால், சிறிது நாட்களுக்கு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக திரிஷா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மேலும் இவர் பல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார். தற்போது இவர் பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், ராம் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.மேலும் இவர் பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக உள்ள இவர் திடீரென இதிலிருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக டிக்டாக் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் திரிஷா, தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ இந்த நேரத்தில் தனது மனதுக்கு கொஞ்சம் மறதி தேவை. டிஜிட்டல் தளம் ஒரு போதை பொருள் போன்றது, வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களிலிருந்து திடீரென திரிஷா விலகியது ரசிகர்களிடையில் வருத்தத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் பலர் ஏன் என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…