நாவல் ஸ்டெம் செல் மூலம் 2,000 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை!

Default Image

நாவல் ஸ்டெம் செல் மூலம் 2,000 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் உலக நாடுகள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி வருகிறது.

இந்நிலையில், அபுதாபி ஸ்டெம் செல் சென்டர் (ஏ.டி.எஸ்.சி.சி) இப்போது COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் 1,200 கொரோனா வைரஸ் நோயாளிகளிகள் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மீண்டதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் நாட்டின் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும், இந்த சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

டாக்டர் யென்ட்ரி வென்ச்சுரா தலைமையிலான ADSCC இன் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, COVID-19 நோயாளிகளுக்கு ஒரு புதிய சிகிச்சையை உருவாக்கியதாக மே மாதம் அறிவித்தனர். UAECell19, ஒரு தன்னியக்க ஸ்டெம் செல் அடிப்படையிலான சிகிச்சையானது, உடல் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்