Andhra Couple - Car Crash [Image source : m9 news]
ஆந்திர மாநிலம் அமலாபுரம் நகரை சேர்ந்தவர்கள் 64 வயதான நாகேஸ்வரராவ் மற்றும் 60 வயதான சீதாமஹாலக்ஷ்மி ஆகியோரது மகள் நவீனா மற்றும் அவரது கணவர் லோகேஷ் ஆகியோர் எல்1 விசாவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நிஷிதா மற்றும் ஹிருத்திக் என இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.
லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.!
தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு நாகேஸ்வரராவ் மற்றும் சீதாமஹாலக்ஷ்மி ஆகியோர் ஆந்திராவில் இருந்து அமெரிக்கா சென்று இருந்தனர். நேற்று லோகேஷ்,மினி வேனில் தனது குடும்பத்துடன் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் வொர்த்துக்கு அருகிலுள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அந்த சமயம் எதிரே வந்த ட்ரக் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், லோகேஷ் தவிர நாகேஸ்வரராவ், சீதாமஹாலக்ஷ்மி, நவீனா, நிஷிதா மற்றும் ஹிருத்திக் ஆகிய 5 பேரும், வாகன ஓட்டிவந்த குடும்ப நண்பரான ருஷில் பாரி என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . லோகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
எதிரே வந்த ட்ராக் ட்ரைவர் மற்றும் 17 வயதான இளைஞனும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோர்கள் ஆந்திர மாநிலம் மும்மிடிவரம் எம்எல்ஏ பி.வெங்கட சதீஷ் குமாரின் உறவினர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…