வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிப்பிக்கப்பட்ட கட்டண முறைகளை தொலைக்காட்சி திரையில் அறிவிக்க வேண்டும் என்றும் விநியோக தள ஆப்ரேட்டர்கள் வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள் புதிய கட்டண விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின் அடிப்படையில் சன் டைரக்ட், டிஷ் டிவி, d2h ,டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகிய வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். மேலும், 200 சேனல்களை பார்ப்பதற்க்கு மாதத்துக்கு 130 ரூபாய் கட்டணம் (வரி உட்பட) என்ற மதிப்பில் கிடைக்கும். இதற்க்கு முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் மட்டுமே வழங்கிக்கொண்டு இருந்தது. மேலும், ஒவ்வொரு கூடுதல் 20 சேனல்களுக்கும் 25 ரூபாய் கட்டணமாய் விதிக்கப்படும். இந்தக் கட்டண அமைப்புக்குள் தூர்தர்ஷன் சேனல் மட்டும் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் அறிவிப்பு தொலைக்காட்சி பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…