இல்லத்தரசிகளுக்கான இனிப்பான செய்தி.. தொலைக்காட்சி சேனல்களின் கட்டணத்தை குறைக்க ட்ராய் அதிரடி உத்தரவு..

Default Image
  • குறைகிறது தொலைக்காட்சி சேனல்களின் கட்டணம்.
  • இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் புதிய உத்தரவு.

வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிப்பிக்கப்பட்ட கட்டண முறைகளை தொலைக்காட்சி திரையில் அறிவிக்க வேண்டும் என்றும் விநியோக தள ஆப்ரேட்டர்கள் வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள் புதிய கட்டண விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின்  அடிப்படையில்  சன் டைரக்ட், டிஷ் டிவி, d2h ,டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகிய   வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். மேலும், 200 சேனல்களை பார்ப்பதற்க்கு  மாதத்துக்கு 130 ரூபாய் கட்டணம் (வரி உட்பட) என்ற மதிப்பில் கிடைக்கும். இதற்க்கு முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் மட்டுமே  வழங்கிக்கொண்டு இருந்தது. மேலும், ஒவ்வொரு கூடுதல் 20 சேனல்களுக்கும் 25 ரூபாய் கட்டணமாய் விதிக்கப்படும். இந்தக் கட்டண அமைப்புக்குள் தூர்தர்ஷன் சேனல் மட்டும்  அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் அறிவிப்பு தொலைக்காட்சி பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong
Women In Space 2025
RIP Director SS Stanley
TN Fisherman