ஆஸ்திரேலிய பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சோகம்.! 2 மாதம் அனுபவித்த பாலியல் கொடுமையை புத்தகமாக வெளியீடு.!

Published by
Ragi

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு  வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்மென் கிரீன்ரீ தனது இளமை காலத்தில் கடல் மீது சாகசம் செய்யும் பயிற்சியை தொடர்ந்து 7 வருடங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரால் உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தனக்கு மாறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்கு செல்ல தனது 22 வயதில் திட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு நடந்த கொடூர சம்பவத்தை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இமயமலைக்கு செல்ல திட்டமிட்ட கார்மென் டெல்லி வழியாக புறப்பட நினைத்து அங்கு சென்றுள்ளார். அதனையடுத்து உள்ளூரில் ஒருவரின் உதவியை நாடிய கார்மெனிடம், ஒருவர் தாம் ஒருவரை அறிமுகப்படுத்துவதாக கூறி காஷ்மீரில் அழைத்து சென்றார். அங்கு அறிமுகமான நபர், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு புறப்படுவதற்கு முன்பு தனது படகு வீட்டில் தங்குமாறும், அதுவே பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் கார்மெனுக்கு அடுத்த சில நாட்களில் தான் அவரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த நபர் எத்தனையோ முறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அந்த இரவுகள் அனைத்தும் தனக்கு நரகம் தான் என்றும் கார்மென் கூறினார். இதனிடையே தனது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியா தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கார்மெனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு செய்ததன் மூலம் காவல்துறையினருக்கு அவரை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த இரண்டு மாதங்களில் கார்மென் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் புத்தமாக தொகுத்து வழங்கியுள்ளார். அதனையடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இனி தான் இந்தியாவிற்கு செல்ல விரும்பவில்லை என்றும் கார்மென் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

9 minutes ago

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி…

36 minutes ago

ஈஷா மகாசிவராத்திரி – பக்தியின் மகாகும்பமேளா! சத்குருவைப் பாராட்டிய அமித்ஷா

கோவை :  ஆண்டுதோறும்  மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…

1 hour ago

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

9 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

11 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

12 hours ago