ஆஸ்திரேலிய பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சோகம்.! 2 மாதம் அனுபவித்த பாலியல் கொடுமையை புத்தகமாக வெளியீடு.!

Published by
Ragi

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு  வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்மென் கிரீன்ரீ தனது இளமை காலத்தில் கடல் மீது சாகசம் செய்யும் பயிற்சியை தொடர்ந்து 7 வருடங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரால் உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தனக்கு மாறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்கு செல்ல தனது 22 வயதில் திட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு நடந்த கொடூர சம்பவத்தை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இமயமலைக்கு செல்ல திட்டமிட்ட கார்மென் டெல்லி வழியாக புறப்பட நினைத்து அங்கு சென்றுள்ளார். அதனையடுத்து உள்ளூரில் ஒருவரின் உதவியை நாடிய கார்மெனிடம், ஒருவர் தாம் ஒருவரை அறிமுகப்படுத்துவதாக கூறி காஷ்மீரில் அழைத்து சென்றார். அங்கு அறிமுகமான நபர், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு புறப்படுவதற்கு முன்பு தனது படகு வீட்டில் தங்குமாறும், அதுவே பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் கார்மெனுக்கு அடுத்த சில நாட்களில் தான் அவரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த நபர் எத்தனையோ முறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அந்த இரவுகள் அனைத்தும் தனக்கு நரகம் தான் என்றும் கார்மென் கூறினார். இதனிடையே தனது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியா தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கார்மெனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு செய்ததன் மூலம் காவல்துறையினருக்கு அவரை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த இரண்டு மாதங்களில் கார்மென் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் புத்தமாக தொகுத்து வழங்கியுள்ளார். அதனையடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இனி தான் இந்தியாவிற்கு செல்ல விரும்பவில்லை என்றும் கார்மென் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

41 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

45 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago