போக்குவரத்துக்கு விதி மீறல்கள் – வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!

Published by
Rebekal
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை வளைகுடா நாடான குவைத் அரசு சட்டநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது.
வளைகுடா நாடான குவைத் நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான திருத்தப்பட்ட சட்டம் நாட்டின் தேசிய சட்டமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி வாகனங்களை பொறுப்பற்ற நிலையில் ஓட்டுவது, சிவப்பு விளக்குகளை எரிய வைத்துக்கொண்டு ஓட்டுவது, வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 200 முதல் 500 தினார் வரை அபராதம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என சட்டத்தில் உள்ளது. இத்துடன் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை முன் இருக்கையில் அமரவைத்து வாகனத்தை ஓட்ட அனுமதிக்க கூடியவர்களுக்கு 100 முதல் 200 தினார் வரை அபராதமும், இரண்டு மாத சிறை தண்டனையும் அனுமதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மற்றொரு நபரின் வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின் கீழ் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தின் போது சேதத்தை விபத்தின் மூலம் ஏற்படுத்துதல், குறைபாடுள்ள வாகனத்தை தெரிந்தே ஓட்டுதல், சரியான போக்குவரத்து பாதைகளில் ஓட்டாமல் தாறுமாறாக ஓட்டுதல் போன்ற அனைத்து குற்றங்களுக்கும் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள், உயர் மின் விளக்குகளை பயன்படுத்துபவர்கள், அதிக சத்தம் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் 50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

8 minutes ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

41 minutes ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

45 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

1 hour ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

2 hours ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

2 hours ago