இந்தியாவில் இன்று முதல் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.யாரிஸ் தயாரிப்பு நிறுத்தப்படுவது பற்றிய செய்திகள் நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தன.அந்த வகையில், இன்று முதல் இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டதாக,டோயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக,நடுத்தர அளவிலான செடான் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றுக்கு டொயோட்டா யாரிஸ் போட்டியாக இருந்தது.
இந்த நிலையில்,இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.எனினும்,யாரிஸின் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருட உதிரி பாகங்கள் கிடைக்க ஆதரவளிப்பதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.அதே வேளையில், நாடு முழுவதும் உள்ள தனது டீலர் சேவை நிலையங்கள் மூலம் அனைத்து யாரிஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,இனி நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் டொயோட்டா கிளான்சா, அர்பன் க்ரூஸர், இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்றவை இருக்கும் என தெரிகிறது.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…