மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்..!

Default Image

இந்த வருடத்தில் மாலத்தீவை நோக்கி அதிமான அளவு சுற்றுலாப்பயணிகள் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த வருடமான 2020-இல் கொரோனாவின் காரணமாக மாலத்தீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் தற்போது மாலத்தீவில் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து தற்போதுள்ள ஜூலை மாதம் வரை இங்கு 5,59,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடமான 2020 ஆம் ஆண்டு வருகை தந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கையை விட குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மஸூம், மாலத்தீவிற்கு தினசரி பயணிகளின் வருகை 5,000 ஆக உள்ளது. இதனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இங்கு கிட்டத்தட்ட 1.30 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கு வரும் பயணிகளில் 23% பயணிகள் தெற்கு ஆசிய அண்டை நாடுகளிலிருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly