வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.அவ்வாறு செய்யவில்லை எனில்,வாட்ஸ்-அப்பில் உள்ள வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,புதிய கொள்கையை நினைவுபடுத்தும் விதமாக,வாட்ஸ்-அப் தற்போது கணக்கு புதுப்பிப்பு பற்றிய தகவலை அறிவித்துள்ளது. அதன்படி,புதிய தனிநபர் கொள்கையை ஏற்று வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே(மே 15) கடைசி நாள் ஆகும்.
அவ்வாறு,’புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படாது என்றும்,ஆனால்,வாட்ஸ்-அப்பில் உள்ள பல வசதிகள் குறைக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது,புதிய கொள்கையை ஏற்காத பயனாளர்கள் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்த முடியாது.அதற்குப்பதிலாக,வாட்ஸ்-அப்பில் இன்கம்மிங் கால் மற்றும் வீடியோ கால் வசதிகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் மெசேஜ் அனுப்புதல் மற்றும் இன்கம்மிங் கால் வசதிகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…