இந்திய திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
சுப்பிரமணியன் மற்றும் நாராயண குட்டி அம்மாள் தம்பதியினருக்கு 1928 ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பிறந்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்கியுள்ளார். முதன் முதலாக ம.கோ.ராமச்சந்திரன் அவர்களின் ஜெனோவா எனும் திரைப்படத்தில் வெளியாகிய பாடல்களுக்கு இசையமைத்த இவர், தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி பாடங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் அவர்கள் இசை மீது கொண்ட நாட்டத்தால் 13 வயதில் கர்நாடக இசையை பயின்று வந்துள்ளார். அதன் பின்னதாக மேடை கச்சேரி நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் கூட நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் 800 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் 80 திரைப்படங்களுக்கும், தெலுங்கில் 30 திரைப்படங்களுக்கும், கன்னடத்தில் 15 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசை திறமைக்காக 2003ஆம் ஆண்டு இசைப்பேரறிஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கலைமாமணி விருது மற்றும் மதிப்புறு முனைவர் பட்டங்களும் இரண்டு பெற்றுள்ளார். இவ்வளவு திறமைகள் கொண்டு விளங்கிய எம் எஸ் விஸ்வநாதன் பலராலும் புகழப்பட்டவராக வாழ்ந்துள்ளார். பின் ஜூலை 14-ஆம் தேதி 2015 அன்று அதிகாலை 4:30 மணி அளவில் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…