இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் இன்று….!

Published by
Rebekal

இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று அனல் பறக்க பேசிய வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த புரட்சி வீரர் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதிக அளவு ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தனக்கு சரியான குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கும் சில பிரச்சினை காரணமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின் எஸ்.ஆர்.தாஸ் உதவியுடன் மற்றொரு கல்லூரியில் சேர்ந்து ஐசிஎஸ் பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் நாம் வேலை பார்க்கக் கூடாது எனும் எண்ணத்தில் லண்டனில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு 1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் எனும் ரேடியோ மையத்தை நிறுவி நாட்டுக்கு எனத் தனிக் கொடி ஒன்றை அமைத்து, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

அதன் பின் பல இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பெண்களுக்கென தனிப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு ஜான்சிராணி படை எனப் பெயரிட்டு, பலராலும் பாராட்டப்பட கூடிய ஒரு விடுதலைப் போராட்ட வீரராக இருந்துள்ளார். அதன் பின்னதாக 1941 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இரவு முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர் மாறுவேடத்தில் தப்பிச் சென்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் மறைந்தார். பின் 1992 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்த பாரத ரத்னா விருது திரும்ப பெறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago