இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் இன்று….!

Published by
Rebekal

இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று அனல் பறக்க பேசிய வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த புரட்சி வீரர் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதிக அளவு ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தனக்கு சரியான குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கும் சில பிரச்சினை காரணமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின் எஸ்.ஆர்.தாஸ் உதவியுடன் மற்றொரு கல்லூரியில் சேர்ந்து ஐசிஎஸ் பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் நாம் வேலை பார்க்கக் கூடாது எனும் எண்ணத்தில் லண்டனில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு 1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் எனும் ரேடியோ மையத்தை நிறுவி நாட்டுக்கு எனத் தனிக் கொடி ஒன்றை அமைத்து, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

அதன் பின் பல இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பெண்களுக்கென தனிப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு ஜான்சிராணி படை எனப் பெயரிட்டு, பலராலும் பாராட்டப்பட கூடிய ஒரு விடுதலைப் போராட்ட வீரராக இருந்துள்ளார். அதன் பின்னதாக 1941 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இரவு முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர் மாறுவேடத்தில் தப்பிச் சென்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் மறைந்தார். பின் 1992 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்த பாரத ரத்னா விருது திரும்ப பெறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

11 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago