திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் தான் தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா என அறியப்படும் சி.என்.அண்ணாதுரை. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பை சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அதன்பின் கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

கல்லூரி முடித்தவர்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் எனும் மனப்பான்மை அதிகம் இருந்த காலகட்டத்தில், ஆங்கிலம் பேசினால் தான் கௌரவம் என நினைத்தவர்களுக்கு எதிர்ப்பாக அண்ணா தமிழில் மட்டுமே பேசியுள்ளார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்த இவர், அதன் பின் திராவிட கழகத்திலிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.

அதன்பின் மாநிலங்களவை உறுப்பினராக 1962 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1960 இல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இந்தியா குடியரசான பிறகு காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைத்த முதல் கட்சி அறிஞர் அண்ணாவின் திராவிட கழக கட்சி தான். அரசியலில் புதிய வரலாறு படைத்த இவர் தான் மதராஸ் மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயரிட்டவர்.

அதன் பின் தனது 59-வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தார். ஒன்றரை கோடி மக்கள் கலந்து கொண்ட இவரது இறுதிச் சடங்கு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியலில் சாதனை புரிந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

8 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

9 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

12 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

12 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

13 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

13 hours ago