புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1901 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் பிஎஸ் ரங்கராஜன். ஆனால் இவரை வாலி என்று அழைத்தால் தான் பலருக்கும் தெரியும். புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், ஓவியருமாகிய இவர் திரைப்படத்தில் எழுதிய முதல் பாடலின் மூலமாக 1958 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அதன் பின்பு 1963 ஆம் ஆண்டு அவர் எழுதிய கற்பகம் எனும் திரைபட பாடலால் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொண்டார். ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் ஆகிய நான்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரத விலாஸ், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு தனது 83 ஆவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…