தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரில் பிறந்தவர் தான் பி.சுசிலா. பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு இசையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை ஆகிய துவாரம் வெங்கடசாமி நாயுடு அவர்களிடம் இசை பயின்றுள்ளார். பின் 1955 ஆம் ஆண்டு இவர் பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் எனும் பாடல் பெரிதும் பிரபலமடைந்தது.
தற்போது வரை சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைப்படத்துறையில் இசைப் பணியாற்றி வரக்கூடிய பி.சுசிலா அவர்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஐந்து முறை தேசிய விருதும், 10 முறைக்கு மேல் மாநில விருதுகளையும் வென்று பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதும் இவருக்கு 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தன் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தேசிய அளவில் இசைத் துறையில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவித்து வருகிறார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…