அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வாகிகன் நகரில் பிறந்தவர் தான் அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி. இவர் முழுநேர எழுத்தாளராக 1943 இல் இருந்து எழுதத் தொடங்கி உள்ளார். இவரது பல கதைகள் காமிக்ஸ் நிறுவனத்தால் படகதைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1953-ல் வெளியான இவரது பாரன்ஹீட் 451 எனும் கதை உலகப் புகழ் பெற்றுள்ளது.
அதன் பின்பு இவரது கதை எழுதும் திறனை பாராட்டி அமெரிக்க தேசிய கலை பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரை இறங்கிய இடத்திற்கு பிராட்பரி லேண்டிங் எனவும் இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தினமும் பல மணி நேரம் கதை எழுதுவதை வழக்கமாகக் கொண்ட இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ஏராளமான கட்டுரைகள், திரைக்கதைகள் மற்றும் நாடகங்களையும் எழுதியுள்ளார். எழுதுவதையே தனது வாழ்நாள் பணியாகச் செய்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு தனது 93 வது வயதில் மறைந்தார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…