அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் எனும் ஊரில் பிறந்தவர் தான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. இவர் அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி எனும் பட்டம் பெற்ற நாதஸ்வர கலைஞர். இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. அங்கு இவரது இசையை பலர் ரசித்துக் கேட்க ஆரம்பித்தனர்.
இவரது முதல் கச்சேரியே அபாரமான வெற்றியடைந்த நிலையில், பல இடங்களில் தொடர்ந்து கச்சேரி நடத்த ஆரம்பித்துள்ளார். மேலும், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். மிஸ் கமலா, கவி காளமேகம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் சங்கீத அகாடமி விருது, அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான பட்டம் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார். இவர் ஆறரை மணி நேர இசை தட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுதும் நாதஸ்வர கலைஞராக புகழ்பெற்ற டிஎன் ராஜரத்தினம் பிள்ளை அவர்களது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…