நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் இன்று…!

Published by
Rebekal

நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று.

நிலவில் முதன் முதலில் கால் தடம் பதித்த விண்வெளி வீரர் எனும் பெருமைக்குரியவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் வாபகெனெட்டா எனும் நகரில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே இவர் தனது தந்தையுடன் விமானத்தில் பயணித்துள்ளார். அப்பொழுதே இவருக்கு விமானம் ஓட்டும் ஆசை வந்துள்ளது. எனவே தனது 16-வது வயதிலேயே விமானம் ஓட்டும் உரிமத்தையும் பெற்றுள்ளார்.

அதன் பின்பு 1962  ஆம் ஆண்டு நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்து அங்கும் டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். 1969 ஆம் ஆண்டு மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வார்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் இணைந்து நிலவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பல்லோ 11 விண்கலத்தில் குழு தலைவராக விண்வெளி சென்ற இவர், 1969 ஜூலை 20 ஆம் தேதி நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் இவருக்கு 17 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான பல்கலைக்கழகங்களில் இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கௌரவ பதக்கங்கள், சிறந்த பணிக்கான நாசா விருது ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று இவருக்கு இருதயத்தில் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைக்குப் பின் இவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் மருத்துவமனையில் இருக்கும்போதே அவரது உடல் நலத்தில் திடீரென சிக்கல் உருவாகியது. இதனையடுத்து ஆகஸ்ட் 25, 2012 ஆம் ஆண்டு சின்சினாட்டி, ஓஹியோவில் இவர் மரணமடைந்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டு சிறந்த விண்வெளி வீரராக திகழ்ந்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் உயிரிழந்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

22 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

47 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago