பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. இவர் பல்வேறு கிராமிய கலைகளை ஆர்வத்துடன் கற்று பயின்றவர். குறிப்பாக புரவியாட்டம், சிக்கு மேலாட்டம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு ஒயில் கும்மி ஆகியவை இவர் மிகவும் விரும்பி பெற்ற கலைகளாக கூறப்படுகிறது.
இவர் விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தேசிய உணர்வு மிக்க பாடல்கள் பலவற்றை எழுதி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர். இவர் தனது பாடல்களில் பல்வேறு சமுதாய சீர்திருத்தம் நிறைந்த கருத்துக்களை புகுத்தியவர். முன்னணி பாடலாசிரியராக கவிராயர் என அன்போடு அழைக்கப்பட்டுள்ளார்.
இவரது திறமையயை பாராட்டி 1967ம் ஆண்டு சங்கீத நாடக சங்கம் சிறந்த பாடலாசிரியராக இவரை தேர்வு செய்தது. மேலும் திரையுலகில் தனக்கென்று தனி இடம் பெற்ற இவர், பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.
பாடகர் மட்டுமல்லாமல் கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்ட உடுமலை நாராயணகவி 1981 ஆம் ஆண்டு தனது 82-வது வயதில் மறைந்தார். இவரது நினைவாக 200ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும் அவரது ஊரில் இவருக்கு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…