நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா  பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் பிறந்தவர் தான் பிங்கலி வெங்கையா. இவர் தனது மேல்நிலைப் பள்ளி படிப்பை மசூலிப்பட்டணத்தில் படித்துள்ளார். மேலும் கொழும்பிலும் இவர் உயர் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். இவர் பல இடங்களில் பணிபுரிந்து, அதன் பின்பு ஆந்திரப் பிரதேசத்தில் வைர சுரங்கம் மற்றும் பருத்தி ஆராய்ச்சியில் சாதனை படைத்துள்ளார்.

எனவே இவர் வைர வெங்கையா மற்றும் பருத்தி வெங்கையா எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 1906 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேயே அரசு யூனியன் ஜாக் கொடி ஏற்றத்தை பார்த்து நமது நாட்டிற்கும் கொடி வடிவமைக்க வேண்டும் என காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின் பொழுது பிங்கலி வெங்கையா வலியுறுத்தியுள்ளார்.

எனவே, நமது தேசத்தந்தை காந்தி அவர்கள் கொடி வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்த இவர், சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் கொண்ட கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின் ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் அசோகச் சக்கரத்தை சேர்க்கலாம் என அறிவுரை கூறியது மட்டுமல்லாமல், அமைதியை குறிக்கும் விதமாக வெண்மை நிறத்தை சேர்க்கலாம் என காந்திஜி கூறியுள்ளார்.

எனவே, மூவர்ண தேசியக் கொடியை உருவாக்கி, நடுவில் அசோக சக்கரத்தினையும் சேர்த்து வெங்கையா தேசிய கொடியை வடிவமைத்து உள்ளார். நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்த பெருமை பிங்கலி வெங்கையாவையே சேரும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவே தன்னை அர்ப்பணித்த வெங்கையா தனது 86 வது வயதில் 1963 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர் மறைந்து நாற்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு பின்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

Published by
Rebekal

Recent Posts

“அமெரிக்காவுக்கு பொற்காலம்., மஸ்க்-கிற்கு நன்றி!” நாடாளுமன்றத்தில் டிரம்ப் முதல் உரை! 

“அமெரிக்காவுக்கு பொற்காலம்., மஸ்க்-கிற்கு நன்றி!” நாடாளுமன்றத்தில் டிரம்ப் முதல் உரை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்…

13 minutes ago

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…

2 hours ago

நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

12 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

14 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

15 hours ago