இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்தினவிழா
1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, விடுதலை அடைந்து தனி நாடானதை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தினவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படிங்கிறது. இந்த நாள் நாடு முழுவதும் விடுமுறை நாளாகும். இந்த நாளில் அனைத்து இந்தியரும் சுதந்திரமடைந்ததை மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதுண்டு.
கொண்டாட்டம்
இந்த நாளில், டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் போன்ற பலவகையான வண்ணமய நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், இந்த நாளில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்படுவதுண்டு. மேலும் அவர்களுக்கு மரியாதையும் செலுத்தப்படும்.
அதன்படி ஒவ்வொரு மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்நாளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இது மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும் கொடியேற்றி இந்த நாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது உண்டு.
கொரோனா பரவல்
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினவிழா நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதில்லை. அதேபோல் இந்த ஆண்டும் சுதந்திர தினவிழா நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…