பாடல்:
ஓங்கி உலகளந்த உத்தமன் போர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கமும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நே லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தோலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்:
நெடியோன் திரிவிக்கிரமன் ஆக ஓங்கி வளர்ந்து உலகத்தை அளந்த உத்தமன் திருமாள்! அவன் திருநாமங்களை பாடி நாம், நம் நோன்பு இருந்ததற்கான காரணத்தை கூறி நீராடுவோம்’ அவ்வாறு நீராடினால், தீமையில்லாமல் நாடெல்லாம் மும்மழை பெய்யும்; அதனால் நெற்பயிர் பருத்து வளரும், அந்த பயிர்கள் ஊடே கயல் மீங்கள் துள்ளித்திரியும், அளகிய குவலை மலர்களிலே புள்ளிவண்டுகள் தேனை குடித்து மெய்மறந்து உறங்கும்,மாட்டு தொழுவத்தில் புகுந்து இருந்து அழகிய முலைகளை பற்றி இழுத்தால் தேக்கி வைத்துக்கொள்ள முடியாத அளவிற்க்கு பால் சுரந்து குடங்களை நிறைக்கும் வள்ளலின் இயல்பு வாய்ந்த பெரிய பசுக்கள்! இத்தகைய நீங்காத செல்வம் நிறையும்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…