TNPL:சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் அணியை விழ்த்தியது…!

Default Image
சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டிஎன்பில் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இத்தொடரின் நேற்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.. டாஸ் வென்று முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சதுர்வேத் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.
127 ரன்களை சேஸ் செய்த சேப்பாக்கம் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கோபிநாத் 54 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்