பெரும்பாலும் நமது வீட்டில் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது இரவு மீதமான பழைய சாதத்தை தான் தொடர்ந்து சாப்பிடுகிறோம். அடிக்கடி இதை சாப்பிடுவதால் நமக்கு அலுத்து போயிருக்கும். இன்று எப்படி அட்டகாசமான சுவை கொண்ட பாஸ்தாவை 5 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாஸ்தாவை அதனுள் போட்டு வேக வைத்து, வடித்து எடுத்து கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றினால் பாஸ்தா கடாயில் ஒட்டாது. அதன் பின் முட்டைகளை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி லேசாக உப்பு சேர்த்து, மிளகு தூள் சேர்த்து முட்டையை கிளறி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளிகளை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி அதிகளவில் சேர்க்கலாம். ஏனென்றால், அது தான் இந்த உணவுக்கு ருசியை கொடுக்கும். தக்காளி வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
பின், மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் தேவையான அளவு சேர்க்கவும். அதன் பின்பு வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பின் இதனுடன் ஏற்கனவே கிளறி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும். பின் சிறிது கொத்த மல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான பாஸ்தா வீட்டிலேயே தயார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…