கைமாறும் நிலைக்கு சென்ற டிக்டாக்? “நான் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர போகிறேன்”- டிக் டாக் நிறுவனர்!

Published by
Surya

தடைகளை எதிர் கொண்டு, நான் மீண்டும் டிக்டாக் செயலியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர போகிறேன் என டிக்டாக் நிறுவனர் ஷாங் யமிங் தெரிவித்தார்.

லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.

இதன்காரணமாக, டிக்டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதன்காரணமாக, டிக் டாக் நிறுவனத்திற்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை கொண்டுவர டிக்டாக் நிறுவனம் தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும், சீன செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என கூறப்படுகிறது.

TikTok May Lose Up To $6 Billion As Result Of India Ban; Users ...

இந்தநிலையில், இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிலும் டிக்டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ள நிலையில், டிக்டாக் செயலிகள் தடை செய்வதற்கான அறிக்கை, விரைவில் வெளியாகும் என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

மேலும் டிக்டாக் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள், டிக்டாக்கின் 90 சதவீத பங்குகளை அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு விற்றுவிடுங்கள் என கூறினார்கள். அப்படி செய்தால் டிக்டாக் நிறுவனம் கைமாறி போகக்கூடும் என்பதை அறிந்த டிக்டாக் நிறுவனர் ஷாங் யமிங், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, மற்ற நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க முடியாது எனவும், அவ்வாறு விற்றால் டிக்டாக் நிறுவனம் கைமாறி போகும் என தெரிவித்த அவர், நான் இதை எதிர்கொண்டு டிக்டாக் செயலியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்போகிறேன் என தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

34 mins ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

39 mins ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

52 mins ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

1 hour ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago