சுமார் 1.2 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து பூமி மற்றும் சந்திரனை புகைப்படம் எடுத்த தியான்வென் -1.!

கொரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மத்தியில் ஜூலை 23 அன்று, சீனா திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை ஆராயும் தனது முதல் செவ்வாய் கிரகமான தியான்வென் -1 விண்கலம் மற்றும் ஆறு சக்கரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவற்றை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியான்வென்-1 என்று அழைக்கப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின் 2 அல்லது 3 மாதங்களுக்கு மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்காது.
China’s first Mars probe beams back a photo of the Earth and the Moon showing the two as small crescents in space, taken 1.2 million kilometres (746,000 miles) away from Earth three days after the Tianwen-1 mission launched https://t.co/KDlOtInUNQ pic.twitter.com/LsXAY32yLT
— AFP news agency (@AFP) July 29, 2020
இந்த இடைப்பட்ட காலத்தில் அதன் மேற்பரப்பில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தியான்வென் -1 பூமியிலிருந்து சுமார் 1.2 மில்லியன் கி.மீ தூரத்தில் இருந்து பூமி மற்றும் சந்திரனின் படத்தை எடுத்துள்ளது என சீனா தேசிய விண்வெளி நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்டிகல் நேவிகேஷன் சென்சார் பயன்படுத்தி இந்த எடுத்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025