வங்காளதேசத்தில் பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்மா நதியில் நேற்று பிற்பகலில் சுமார் 50 பயணிகளுடன் பயணித்த படகு மூழ்கியுள்ளது. இதில் மூன்று சிறு குழந்தைகள் மற்றும் 50 வயது பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகில் பயணிகள் தவிர, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சரக்கு, தேங்காய் மற்றும் சைக்கிள்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிக சுமை காரணமாக விபத்து ஏற்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த படகு விபத்தில் 20 பேர் ஏற்கனவே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள பயணிகளை தேடும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…