கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று 1973-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த மைல்கல் ரோ வெர்சஸ் வேட் முடிவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படும் ஆவணம் ஒன்று நேற்று அமெரிக்காவில் கசிந்தது.இது அமெரிக்க பெண்கள் மற்றும் சமூகநலச் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியது.இதனால்,பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் செய்தி அமெரிக்க கருக்கலைப்புச் சட்டங்களை மத்திய கிழக்கில் உள்ள சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டியது.அந்த வகையில், கர்ப்பமானது தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து அல்லது கருவில் அசாதாரணம் இல்லாவிட்டாலும் கூட வட ஆப்பிரிக்காவிலும் கருக்கலைப்பு சட்டவிரோதமானது.இருப்பினும்,கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் மூன்று நாடுகள் இங்கே.
இஸ்ரேல்:
இஸ்ரேலில் கருக்கலைப்பு சில சமயங்களில் சட்டபூர்வமானதாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.அந்த வகையில் இஸ்ரேலில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் “கர்ப்பத்தை நிறுத்தும் வாரியத்தின்” அனுமதியை முதலில் பெற வேண்டும்.
மேலும்,இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின்படி, பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றையாவது பூர்த்தி செய்து கருக்கலைப்பு நடைபெற வேண்டும்.அதன்படி,
அதே சமயம்,கருக்கலைப்பு தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு அதிக அளவில் அளிக்கும் சீர்திருத்தங்களுக்கு இடதுசாரி மெரெட்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வலியுறுத்தினர். ஆனால்,சில மதவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர் என்று ஜனவரி மாதம் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
துருக்கி:
கர்ப்பம் தரித்த முதல் 10 வாரங்கள் வரை தடையின்றி கருக்கலைப்பு செய்ய துருக்கியில் சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கர்ப்பம் தாய்க்கு ஆபத்து அல்லது கருவில் அசாதாரணம் இருந்தால் கருக்கலைப்பு சாத்தியமாகும்.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் செய்யப்படும் கருக்கலைப்புகளை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே,கடத்த 2020 ஆம் ஆண்டில்,துருக்கிய செய்தி நிறுவனமான Duvar, பெரும்பாலான பொது மருத்துவமனைகள் பெண்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கருக்கலைப்பு செய்வதில்லை என்று தெரிவித்தது.அதே சமயம்,ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மட்டுமே கருக்கலைப்பு செய்கின்றன என்று கூறப்படுகின்றன.
துனிசியா:
துனிசியாவில் முதல் மூன்று மாதங்கள் முடியும் வரை கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,கருவின் அசாதாரணங்கள் அல்லது தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க உண்டு.இதற்காக,நாடு முழுவதும் பொது “குடும்பக் கட்டுப்பாடு மையங்கள்” உள்ளன.
அதைப்போல,ஈரானில் பல ஆண்டுகளாக, கர்ப்பம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது கருவில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்தது.
இந்த வேளையில்,நவம்பர் 2021 சட்டம் இந்த அமைப்பை ஒரு நீதிபதி மற்றும் இரண்டு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவாக மாற்றியது. இதன்மூலம்,அரசு ஊடகங்கள் கருக்கலைப்பைக் கண்டிக்க வேண்டும் எனவும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சட்டவிரோத கருக்கலைப்புகளை அடையாளம் காண வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் நோக்கம்,கருக்கலைப்பை குறைத்து ஈரானின் மக்கள்தொகையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…