இந்த ஒரு மந்திரம் போதும்..!நீங்கள் கோடீஸ்வரராக..!

Published by
Sharmi

பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வியாழக்கிழமை அன்று கடையில் சுத்தமான வாசனை நிறைந்த தாழம்பூ குங்குமம் வாங்கி கொள்ளுங்கள். அதனை வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் கோவிலில் தானமாக கொடுங்கள்.

வீட்டில் சமைப்பதற்கு கோதுமை மாவு அரைப்பீர்கள் என்றால் அதில் 7 துளசி இலைகள், 2 சிட்டிகை குங்கும பூ சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த மாவு வீட்டில் தீராமல் இருக்கும் வரை, உங்கள் வீட்டில் பணமும் தீராமல் இருக்கும்.

அருகில் இருக்கும் கோவிலில் மகாலட்சுமி சன்னிதானம் இருந்தால் தொடர்ந்து 5 வாரம் சென்று வாருங்கள். மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூ சூட்டி அர்ச்சனை செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் குறையும். பணவரவு அதிகரிக்கும்.

காமாட்சி அம்மனுக்கு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டுப்புடவை சாற்றி வழிபட்டு வந்தால் உங்கள் கடன் சுமை குறையும். செல்வ வளம் பெருக தொடங்கும்.

நீங்கள் தினமும் பூஜை அறையில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்: காலையில் சுத்தமாக குளித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி அதன் முன் ஒரு விரிப்பில் அமர்ந்து கொண்டு விளக்கை பார்த்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

சித்தர் துதி ஓம் அகத்தீசாய நமக

ஓம் நந்திசாய நமக

ஓம் திருமூல தேவாய நமக

ஓம் கருவூர் தேவாய நமக

ஓம் ராமலிங்க தேவாய நமக.

இந்த மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால் கூட போதும். அதிகமான முறை உச்சரித்தாலும் தவறில்லை. உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர்ந்து வாழ்வில் செல்வம் தழைத்தோங்க இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

17 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

20 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

51 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago