அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அன்று வெளியான படம் பிகில் இத்திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி போன்ற ஒரு நட்சத்திர பட்டலாமே நடித்திருந்தனர்.
இந்நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலை குவித்து இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார்.
அதில் பிகில் படம் 50 நாட்களை கடந்து உலக அளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறிய இந்த நேரத்தில் படத்தை விரும்பி தியேட்டரில் பார்த்த ஒவ்வொருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். பிகில் படம் வெளியானத்துக்கு இதுதான் முதல் அதிகாரபூர்வமான டிவிட் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…