உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? என இயக்குனர் சுரேஷ் காமாட்சி ட்வீட்.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று, தமிழக பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என பள்ளி, கல்லூரி, கடைகள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள், பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…