இந்த படம் நாம் இருக்கிறோம் என்றாலே சரித்திரம் – சரத்குமார்.!

Default Image

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் 2 பாக ஷூட்டிங்கும் மொத்தமாக முடிந்துவிட்டது. தற்போது முதல் பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கான டப்பிங், எடிட்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குககளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். படத்தில் நடித்தது குறித்து நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது ” பொன்னியின் செல்வன் பற்றி ஒரு முறையாவது மக்கள் பார்ப்பார்கள் என்ற படம். அந்த படத்தில் இருப்பது மிகவும் பெரிய விஷயம்… படப்பிடிப்பில் நான் பிரகாஷ்ராஜ் எல்லாரும் உட்கார்ந்து பேசுவது என்னவென்றால், இந்த படம் நாம் இருக்கிறோம் என்றாலே சரித்திரம்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்