பிரம்மனுக்கு பாடம் கற்ப்பித்த முருகன்! உடல் நலம், கல்வி, வேலை என சகலமும் அருளும் திருத்தலம்!

Published by
மணிகண்டன்
  • பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை மறந்த பிரம்மனுக்கு இந்த தலத்தில் தான் முருகன் அதனை கற்பித்தார்.
  • இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் குரு தோஷம், கண் பிரச்சனைகள், உடல் நலம், கல்வி என சகலமும் சரியாகிவிடும்.

திருவாரூர் மாவட்டம் என்கண் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. சிவன் கோவிலாக இருந்தாலும் இந்த கோவிலில் முருகனுக்கு தான் தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்புக்கு என்று தனி வரலாறு உண்டு. நாம் மிகவும் கேட்டு பழகிய அந்த புராண வரலாறு இந்த தலத்தில் தான் நிகழ்ந்தது.

பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை படைக்கும் தொழிலைச் செய்துவரும் பிரம்மன் மறந்து விட்டார். அந்த சமயம் முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பிரம்மனிடம் கேட்க அவருக்கு தெரியவில்லை. உடனே மந்திரத்திற்கான அர்த்தம் தெரியாமல் படைக்கும் தொழிலை பிரம்மன் செய்யக்கூடாது என முடிவெடுத்து. அந்த நேரம் முருக பெருமான்தான் படைக்கும் தொழிலைச் செய்து வந்தார். பிரமண்ணை சிறையிலும் அடைத்தார்.

சிறையில் இருந்த பிரம்மன் சிவனை நோக்கி அந்த தலத்தில் வழிபட தொடங்கினார். மீண்டும் படைக்கும் தொழிலை தன்னிடம் வழங்க வேண்டி சிவபெருமானை வழிபட்டார். உடனே சிவபெருமான் பிரம்மன் முன் தோன்றி, மீண்டும் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்ய அனுமதிக்க வேண்டுமென முருகப்பெருமானிடம் கூறினார். ஆனால், முருகன் மறுத்து விட்டார். பிறகு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை முருகன் பிரம்மனிடம் கற்பித்து. பின்னர் படைக்கும் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைக்குமாறு சிவபெருமான் கூறினார்.

அதனால் இத்தலத்தில் முருகன் உற்சவராக காட்சியளிக்கிறார். வியாழக்கிழமை தோறும் இந்த கோவிலில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து வழிபட்டால் குரு  தோஷம் நீங்கும். மாணவர்களின் கல்வி தடைகள் நீங்கும். மேலும், கண் பிரச்சினை உள்ளவர்கள் இங்குள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண்நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

இதுபோக செவ்வாய்க் கிழமைகளில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தமான எந்த பிரச்சனையும் அண்டாது என்பது ஐதீகம். மேலும், இத்தலத்தில் வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் என பல நம்பிக்கைகள் உள்ளன.

பிரம்மனுக்கு நான்கு தலைகள் உண்டு, எட்டு கண்கள் உண்டு. பிரம்மன் இங்கு சிவனை வழிபட்டதால் இந்த ஊருக்கு என்கண் என பெயர் உண்டு. மேலும், இந்த ஊருக்கு பிரம்மபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

2 hours ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

3 hours ago