திருவெம்பாவை
பாடல் 2 :
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!
சீசி இவையுஞ் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றலம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்? யாம் ஆரேலோர் எம்பவாய்!
பாடல் விளக்கம் :
எழும்புவர் சிறந்த அணிகளையுடைய பெண்ணே இரவும் பகலும் நாம்பேசும் போதெல்லாம் யாவும்கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனாகிய இறைவனுக்கே என் அன்பு என்று சொல்வாய் அந்த அன்பை இந்த மலர்ப்படுக்கையின் மீது எப்போது வைத்தாய்!உள்ளே இருப்பவள் சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை! நீங்களும் தாம் அணிந்திருக்கின்றீர்கள் தோழிகளே! சீ சீ! நீங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?
எழுப்புவர் : தேவர்களும் வணங்குவதற்கு அரிதாகிய அவர்கள் தங்கள் நிலைமைக்கு இரங்கிக் கூச்சப்படுகின்றவாறு உள்ளவை அவன் திருவடிகள் ஒளிமயமான அவன் அந்தத் திருவடிகள் இந்த மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருள்வான்.அவன் சிவலோகன்,திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பன்.நாம் யார்?அவன் அடிமைகளே!
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…