திருப்பாவை
பாடல் : 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும்
மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
‘மாமாயன் மாதவன் வைகுந்த’ னென்றென்று
நாமம் பலவும் நவின்றலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம்:
தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் எரியவும்,அகில் முதலியவற்றின் புகை மணக்கவும்,தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையில் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகள் இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை ஆதலால் அவள் தாயை எழுப்ப வந்தவர்களின் மாமியை அழைத்து,அவளை எழுப்பும் படி வேண்டுகின்றனர்) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாதலால் ஊமையோ? அல்லது செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கிறளோ? மாமாயனே,மாதவனே! வைகுந்தனே! என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை;அவளை எழுப்ப மாட்டீர்களோ? என்று ஆண்டாள் இயற்றி உள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…