திருப்பாவை
பாடல் ; 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பார்வைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;நாட்கலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம் :
இம்மண்ணுலத்தில் வாழ்பவர்களே! நாம் நம் பாவை நோன்புக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள் திருப்பாற்கடலிலே அறிதுயில் கொண்டுள்ள இறைவன் திருவடிகளைப் பாடுவோம் நெய் உண்ணமாட்டோம் ;பால் பருகமாட்டோம்; விடியற் காலையில் நீராடுவோம் கண்களுக்கு மைத் தீட்ட மாட்டோம்;கூந்தலில் பூ வைத்து முடிக்க மாட்டோம்;செய்யத்தக்காத எச்செயலையும் செய்ய மாட்டோம்;ஐயமும்,பிச்சையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடுவோம் இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…