திருப்பாவை
பாடல் : 11
கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் போருளோலோ ரெம்பாவாய்
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம் :
இடையர் கன்றுகளையும் கறவைப்பசுக் கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்,பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்,குற்றம் ஒன்றுமில்லாதவர்,அவர்களது தங்கக்கொடி போன்ற பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே! எழுந்து வா! நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து,உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில் வண்ணன் திருநாமத்தை பாடுகின்றோம்.செல்வ பெண்ணே!கொஞ்சம் கூட அசையாமலும்,பேசாமலும்,நீ எதற்காக இவ்வாறு உறங்குகின்றாய்? இதற்குப் பொருள்தான் என்ன? என்று அருளிகிறார் ஆண்டாள்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…