என்னை கொலை செய்துவிட்டு தற்கொலை என நிரூபிப்பார்கள் – நடிகை பாயல் கோஷ்!

Default Image

என்னை கொலை செய்துவிட்டு தற்கொலை என நிரூபிப்பார்கள் நடிகை பாயல் கோஷ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தேரோடும் வீதியிலே எனும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாகப் பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது அண்மையில் பாலியல் புகார் கூறிய நடிகை தான் பாயல் கோஷ். இந்நிலையில் இந்த அனுராக் காஷ்யப் எனும் இயக்குனர் இயக்கிய படங்களில் நடித்த மேலும் சில நடிகைகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக குறிப்பிட்டு இருந்தனர், ஆனால் அனுராக் காஷ்யப் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என அந்த நடிகைகள் மறுத்து இருந்தனர். அனுராக் காஷ்யப் தவறாக நடந்தார் என பாயல் புகார் அளித்திருந்த நிலையில், இது குறித்த வழக்குகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. போலீசார் இது தொடர்பான விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் கவர்னர் மற்றும் உள்துறை இணை அமைச்சரை சந்தித்து பாயல் அண்மையில் புகார் அளித்திருந்தார். தற்பொழுது ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ஒய் பிரிவு பாதுகாப்பு நடிகை கங்கானாவுக்கு வழங்கப்பட்டது போல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்ததுடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தினை டேக் செய்து தனது ட்விட்டர் பதிவில், என்னை இந்தி பட உலக மாஃபியாக்கள் கொலை செய்து விடுவார்கள், ஆனால் அந்த கொலையை தற்கொலை என்று நிருபித்து விடுவார்கள் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
TN CM MK Stalin - TVK Leader Velmurugan
TVK meeting in Chennai
Vithya Rani - NTK
MK Stalin - EPS
ICC Champions - Indian cricket team
ed - chennai high court